Monday 29 July 2013

அரிமளம் கோவிந்தராஜன் அர்ச்சகர்!


அரிமளம் கோவிந்தராஜன் அர்ச்சகர்!

திருக்கோவில் ஆன்மீகச்சேவையுடன் நாடி வரும் அன்பர்க்கெல்லாம், நல்வாழ்க்கை வழிகாட்டியுமாகத் திகழும் அரிமளம் கோவிந்தராஜன் அர்ச்சகர்!

ஐயா அவர்கள் வேண்டியோர் வேண்டும் எல்லாம் நல்லன நல்கும் மகான் அரிமளம் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் அதிஷ்டான ஆலய அர்ச்சகராக இருக்கிறார்கள். அருகாமையில் அமைந்திருக்கும் பழம்பெரும் சீனிவாசப்பெருமாள் கோவில் புனருத்தாரண திருப்பணியும் பூஜையும் செய்து வருகிறார்கள்.விரைவில் பெருமாள் கோவில் புத்தெழில் பெற்று நாடி வரும் அடியார்க்கெல்லாம் , வேண்டுவன தரும் கற்பகத்தருவாக காட்சி தரும் காலம் வெகு தொலைவில் இல்லை. மேலும் அருகே உள்ள செட்டி ஊரணி சுந்தரராஜப்பெருமாள் கோவில் பட்டராகவும் சேவை செய்து வருகிறார்கள்.

ஆன்மீகப்பணி இவரின் ஒரு கண் என்றால் , நாடி வரும் அன்பர்க்கு அன்ன தானம் உள்ளிட்ட சேவை செய்யும் பணி இவரின் மறு கண்.

வட கலைக் கோவிலான சீனிவாசப்பெருமாள் கோவில்,தென் கலைக் கோவிலான சுந்தரராஜப்பெருமாள் கோவிலுக்கும் அரிக்கும் சிவனுக்கும் இணைப்பாக இருப்பதால் தானோ என்னவோ, இவரால் நாடி வரும் அனைவர்க்கும் உள்ளன்புடன் தன்னலம் கருதாப்பணி செய்ய முடிகிறது.

ஐயா அவர்கள் , நம்முடைய முற்கால வாழ்க்கை மற்றும் தற்கால வாழ்க்கை மாறுதல்களை நாம் உணரும் வண்ணம் நம்முடைய இராசி நட்சத்திரம் கொண்டு திறம்பட எடுத்துரைக்கிறார்கள்.மேலும், வருங்கால வாழ்க்கை செம்மையுற, குடும்பம் சுபிட்சமடைய , குடும்பத்தில் தடைப்பட்ட திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் தக்க காலத்தில் நடைபெற,குழந்தைப்பேறு அமையாத குடும்பத்தில் விரைவில் மழலைக்குரல் கேட்க, குடும்பத்தினர் மக்கள் நற்கல்வி நல்ல வேலை வாய்ப்பு பெற, தக்க வழியையும் ஆன்மீகத் தீர்வையும் தன்னலம் கருதாத பொது நலச்சேவையாகச்செய்து வருகிறார்கள்.

ஐயா அவர்களின் ஆன்மீகம் சார்ந்த மக்கள் சேவை, தக்க முறையில் செவ்வனே இறை ஈடுபாடு கொண்ட ஆன்மீக அன்பர் எல்லோர்க்கும் சென்று சேரவே, யாம் இங்கே ஐயாவைப்பற்றிய இந்த சிறிய வலைப் பதிவை, இறைவன் திருவடி பணிந்து சமர்ப்பிக்கிறோம்.