Friday 1 November 2013
Thursday 17 October 2013
மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் மஹா குருபூஜை. 29-10-2013
வணக்கம்!
* குறிப்பு:
தங்கள் தொடர்பிற்கு;
திரு.கோவிந்தராஜன் அர்ச்சகர்
:கை பேசி: 99441 02996 *
இமெயில் : govindharajanarchagar@gmail.com
மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் மஹா குருபூஜை.
29-10-2013
நாளது 29-10-2013 , தமிழ் மாதம் ஐப்பசி 12 ஆம் தேதி தசமி திதி அன்று, மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் மஹா குருபூஜை. காலை 11.30 மணிக்கு அரிமளம் ஸ்ரீ சுவாமிகள் அதிஷ்டானத்தில், மஹா அபிஷேகம் ஆராதனை சிறப்புற நடைபெறும்.
மதியம் அன்ன தானம் நடைபெறும். அடியார்கள் கலந்துகொண்டு ஆன்ம நலமும் ஆற்றலும் பெற்றுய்ய ஸ்ரீ சுவாமிகள் திருவடி பணிகிறோம். கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் திருவடி போற்றி!
வருகை தரும் அடியார்க்கும்,அன்பர்க்கும் மஹா குருபூஜை தினத்தன்று அன்னதானம் ஆலய அர்ச்சகர் திரு.கோவிந்தராஜன் அவர்களால்,முன்னின்று சிறப்புற நடத்தப்பெறுகிறது. மேலும்,பிரதி மாத குருபூஜையும் இவ்வண்ணமே,அர்ச்சகர் அவர்களால் நடத்தபெறுகிறது , மேலும், அதிஷ்டானத்திற்கு, முதல் முறையாக தரிசிக்க வரும் அன்பர் யாவருக்கும் அன்ன தானம் அர்ச்சகர் அவர்களால், வழங்கப்படுகிறது.
சிரமமான பொருளாதார சூழலிலும்,அர்ச்சகர் அவர்கள் இந்தப் பணியை , இறை கடமை என செய்து வருகிறார்கள்.
எதிர்வரும் மஹா குருபூஜை அன்னதானம் , அவ்வண்ணமே, சிறப்புற
நடைபெற நம்மால் இயன்ற உதவி தனை , மளிகைப் பொருட்களாகவோ, பழங்களாகவோ, பூ வகைகளாகவோ அல்லது தம்மால் இயன்ற காணிக்கையாகவோ ஆலயத்திற்கு அளித்து , மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் அருளாசி பெற்று நலம் பெறுவோம்!
காணிக்கை அளித்தாலும் அளிக்க முடியா நிலையில் இருந்தாலும் அன்பர்கள் யாவரும் அவசியம் மஹா குருபூஜையில் கலந்து கொண்டு , மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் அருளாசியினை பெற்று, நலம் பல பெற அன்புடன் அழைக்கின்றோம்!
திரு.கோவிந்தராஜன் அர்ச்சகர்
:கை பேசி: 99441 02996 *
இமெயில் : govindharajanarchagar@gmail.com
* ஆலய பணிகளில் இருக்கும் போது , அர்ச்சகர் அவர்கள் மொபைலில் பேச மாட்டார்,எனவே, அன்பர் யாவரும் , அவர் மொபைலை எடுக்காத சமயத்தில், message மூலமாகவோ அல்லது இமெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்!
Monday 29 July 2013
அரிமளம் கோவிந்தராஜன் அர்ச்சகர்!
திருக்கோவில் ஆன்மீகச்சேவையுடன் நாடி வரும் அன்பர்க்கெல்லாம், நல்வாழ்க்கை வழிகாட்டியுமாகத் திகழும் அரிமளம் கோவிந்தராஜன் அர்ச்சகர்!
ஐயா அவர்கள் வேண்டியோர் வேண்டும் எல்லாம் நல்லன நல்கும் மகான் அரிமளம் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் அதிஷ்டான ஆலய அர்ச்சகராக இருக்கிறார்கள். அருகாமையில் அமைந்திருக்கும் பழம்பெரும் சீனிவாசப்பெருமாள் கோவில் புனருத்தாரண திருப்பணியும் பூஜையும் செய்து வருகிறார்கள்.விரைவில் பெருமாள் கோவில் புத்தெழில் பெற்று நாடி வரும் அடியார்க்கெல்லாம் , வேண்டுவன தரும் கற்பகத்தருவாக காட்சி தரும் காலம் வெகு தொலைவில் இல்லை. மேலும் அருகே உள்ள செட்டி ஊரணி சுந்தரராஜப்பெருமாள் கோவில் பட்டராகவும் சேவை செய்து வருகிறார்கள்.
ஆன்மீகப்பணி இவரின் ஒரு கண் என்றால் , நாடி வரும் அன்பர்க்கு அன்ன தானம் உள்ளிட்ட சேவை செய்யும் பணி இவரின் மறு கண்.
வட கலைக் கோவிலான சீனிவாசப்பெருமாள் கோவில்,தென் கலைக் கோவிலான சுந்தரராஜப்பெருமாள் கோவிலுக்கும் அரிக்கும் சிவனுக்கும் இணைப்பாக இருப்பதால் தானோ என்னவோ, இவரால் நாடி வரும் அனைவர்க்கும் உள்ளன்புடன் தன்னலம் கருதாப்பணி செய்ய முடிகிறது.
ஐயா அவர்கள் , நம்முடைய முற்கால வாழ்க்கை மற்றும் தற்கால வாழ்க்கை மாறுதல்களை நாம் உணரும் வண்ணம் நம்முடைய இராசி நட்சத்திரம் கொண்டு திறம்பட எடுத்துரைக்கிறார்கள்.மேலும், வருங்கால வாழ்க்கை செம்மையுற, குடும்பம் சுபிட்சமடைய , குடும்பத்தில் தடைப்பட்ட திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் தக்க காலத்தில் நடைபெற,குழந்தைப்பேறு அமையாத குடும்பத்தில் விரைவில் மழலைக்குரல் கேட்க, குடும்பத்தினர் மக்கள் நற்கல்வி நல்ல வேலை வாய்ப்பு பெற, தக்க வழியையும் ஆன்மீகத் தீர்வையும் தன்னலம் கருதாத பொது நலச்சேவையாகச்செய்து வருகிறார்கள்.
ஐயா அவர்களின் ஆன்மீகம் சார்ந்த மக்கள் சேவை, தக்க முறையில் செவ்வனே இறை ஈடுபாடு கொண்ட ஆன்மீக அன்பர் எல்லோர்க்கும் சென்று சேரவே, யாம் இங்கே ஐயாவைப்பற்றிய இந்த சிறிய வலைப் பதிவை, இறைவன் திருவடி பணிந்து சமர்ப்பிக்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)