வணக்கம்!
* குறிப்பு:
தங்கள் தொடர்பிற்கு;
திரு.கோவிந்தராஜன் அர்ச்சகர்
:கை பேசி: 99441 02996 *
இமெயில் : govindharajanarchagar@gmail.com
மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் மஹா குருபூஜை.
29-10-2013
நாளது 29-10-2013 , தமிழ் மாதம் ஐப்பசி 12 ஆம் தேதி தசமி திதி அன்று, மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் மஹா குருபூஜை. காலை 11.30 மணிக்கு அரிமளம் ஸ்ரீ சுவாமிகள் அதிஷ்டானத்தில், மஹா அபிஷேகம் ஆராதனை சிறப்புற நடைபெறும்.
மதியம் அன்ன தானம் நடைபெறும். அடியார்கள் கலந்துகொண்டு ஆன்ம நலமும் ஆற்றலும் பெற்றுய்ய ஸ்ரீ சுவாமிகள் திருவடி பணிகிறோம். கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் திருவடி போற்றி!
வருகை தரும் அடியார்க்கும்,அன்பர்க்கும் மஹா குருபூஜை தினத்தன்று அன்னதானம் ஆலய அர்ச்சகர் திரு.கோவிந்தராஜன் அவர்களால்,முன்னின்று சிறப்புற நடத்தப்பெறுகிறது. மேலும்,பிரதி மாத குருபூஜையும் இவ்வண்ணமே,அர்ச்சகர் அவர்களால் நடத்தபெறுகிறது , மேலும், அதிஷ்டானத்திற்கு, முதல் முறையாக தரிசிக்க வரும் அன்பர் யாவருக்கும் அன்ன தானம் அர்ச்சகர் அவர்களால், வழங்கப்படுகிறது.
சிரமமான பொருளாதார சூழலிலும்,அர்ச்சகர் அவர்கள் இந்தப் பணியை , இறை கடமை என செய்து வருகிறார்கள்.
எதிர்வரும் மஹா குருபூஜை அன்னதானம் , அவ்வண்ணமே, சிறப்புற
நடைபெற நம்மால் இயன்ற உதவி தனை , மளிகைப் பொருட்களாகவோ, பழங்களாகவோ, பூ வகைகளாகவோ அல்லது தம்மால் இயன்ற காணிக்கையாகவோ ஆலயத்திற்கு அளித்து , மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் அருளாசி பெற்று நலம் பெறுவோம்!
காணிக்கை அளித்தாலும் அளிக்க முடியா நிலையில் இருந்தாலும் அன்பர்கள் யாவரும் அவசியம் மஹா குருபூஜையில் கலந்து கொண்டு , மகான் கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள் அருளாசியினை பெற்று, நலம் பல பெற அன்புடன் அழைக்கின்றோம்!
திரு.கோவிந்தராஜன் அர்ச்சகர்
:கை பேசி: 99441 02996 *
இமெயில் : govindharajanarchagar@gmail.com
* ஆலய பணிகளில் இருக்கும் போது , அர்ச்சகர் அவர்கள் மொபைலில் பேச மாட்டார்,எனவே, அன்பர் யாவரும் , அவர் மொபைலை எடுக்காத சமயத்தில், message மூலமாகவோ அல்லது இமெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்!